புதன், 7 பிப்ரவரி, 2018

மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் எங்கே??

ரஷ்ய, லத்தீன் இலக்கியங்களை மொழிப்பெயர்த்த காலம் போய் ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழி பெயர்க்கும் காலம் உருவானது. தமிழில் மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் சொற்கள் ஒன்றாகாமல் பிரித்து தெளிக்கப்படுகிறது. இதை மொழிப்பெயர்ப்பாளரும் நவீன படைப்புகள் என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்கள். உங்களுக்கு புரியவில்லையா??? நீங்கள் இன்னும் சற்று அதிகமாகவே இலக்கிய வாசிப்புக்கு ஆளாக வேண்டுமென சிலுவையில் ஏற்றுகிறார்கள்.

அன்னிய தேச மொழிகளை விடுங்கள். அண்டை மாநில இலக்கியங்களே மொழிபெயர்ப்பு உட்படுவதில்லை. மலையாளத்திலிருந்து தமிழ் கொஞ்சமாய் மொழிபெயர்க்கப்படுகிறது. மற்ற மொழிகளான தெலுங்கு கன்னட மொழிகளின் படைப்புகள் குறித்து நமக்கு ஒன்றும் தெரிவதே இல்லை. எப்போதாவது ஆளும் அரசு எழுத்தாளரை மறைமுகமாக கொல்லும் போது தவிர ..... அப்போதும் பெயர்களை மட்டுமே தெரிந்துக் கொள்கிறோம். படைப்புகளை அல்ல.

தமிழில் இருந்தும் மற்ற மொழிகளுக்கு படைப்புகள் மாற்றம் செய்யப்படுகிறதா அதுவும் கிடையாது. விருது பெறும் படைப்புகள் மொழி பெயர்க்கப்படுகிறது. வாசிக்க மக்களை சென்றடைகிறதா என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விகுறி தான். தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். அதுவும் மொழிவளமை இல்லாமல் ஏன் படித்தோம் என்ற அளவிலே இருக்கிறது.

ஒருமுறை வேடிக்கையாக நண்பர் சொன்னார். நீ முதலில் கவிதை என கிறுக்குவதை நிறுத்திவிடு. உன்னை போலவே ஒவ்வொரு வார்த்தையும் பல கவிதைகளாக நொடி பொழுதில் உருமாற்றி எழுத எல்லாராலும் முடியும். அதே போலவே மொழிப்பெயர்ப்புகளுக்கான எழுத்தாளர்களிடம் எவரேனும் ஒரு மேடையில் விளிம்பி இருக்க வேண்டும். மொழிப்பெயர்ப்புகளை கைவிடுங்கள் என்று....

முன்பின் முரணாக இருக்கிறதல்லவா... மொழிபெயர்க்க ஆள் இல்லை/ மொழிப்பெயர்த்தால் படுபிராதையாக இருக்கிறதென.....

தற்போதைய மொழிபெயர்ப்பில் திறமை உள்ளவர்களை பின்னூட்டமிடுங்கள். வாசித்து பார்ப்போம்

-ராஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...