சனி, 10 பிப்ரவரி, 2018

இரவின் கவிதைகள்

அமைதியின் சத்தம் பேரிரைச்சலாய் இருக்கிறது.
வெக்கையின் ஈரம் பாரமாய் இருக்கிறது
நினைவுகளின் காலம் கொடூரமாய் இருக்கிறது

உன் சொற்படி எண்ணிக்கையை ஆரம்பிக்கிறேன்.
ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் நடத்திய
சிந்தனையில் தறிக்கெட்டு போகிறது
இந்த இரவின் பொழுது.

விழிகள் மூடா இக்கணத்தில்
கைகோர்த்து நடக்கலாம்....
சபித்தே சாகட்டும் கேடுகெட்ட இரவு.

***************
***************
உனக்கு கேட்கிறதா
இந்த இரவின் சப்தம்?
இதோ நகர்கிறான் ஐஸ்வண்டிக்காரன்
இந்த இரவை நகர்த்தியப்படி.

மீன் வாசனை தேடி
நகர்கின்றது பெருத்த பூனையொன்று.
மின்மினிகளும் அலைந்தே திரிகிறது
தூரத்தே குழந்தை அழும் சத்தம்
சற்று உள்வாங்கி கேள்....
சலங்கையோடு வளையலின் சப்தமும்

நிலவை வெறித்த நட்சத்திரங்கள்
பயத்தில் மிரளுகின்றன.
கெளளி சத்தம் சிந்தையை கலைக்கிறது

உனக்கும் கேட்கிறதா
இந்த இரவின் சப்தம்?

வா... இந்த இரவோடு பயணிப்போம்.

*************
*************
என் நந்தவனமெங்கும்
உன் கானகுரலுக்கு காத்திருக்கிறது.
இந்த இரவும், நானும்
விழித்தே இருக்கிறோம்.
விடியலில் ஆதவன் மலரட்டும்.

-ராஜி







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...