புதன், 7 பிப்ரவரி, 2018

நீங்கள் ஏன் எழுத வேண்டும்??

நீங்கள் ஏன் எழுத வேண்டும். ???

கனமழை சென்னைவாசிகளுக்கு நினைவில் இருக்கும். பழைய மகாபலிபுரம் ரோட்டிலிருந்து இரவு 10மணிக்கு மேல் ஒரு செய்தி பரவியது. கனமழையின் இரண்டாம் நாளாது.

"அவசரமாக கால்நடை மருத்துவர் தேவை. பசு ஒன்று கன்று ஈன  முடியாமல் தவிக்கிறது. முடிந்தவரை பார்த்துவிட்டோம். மருத்துவர் உதவி அவசியம் தேவை. தெரிந்தவர்கள் உதவுங்கள்."  -செய்தி பல்வேறு வடிவில் காட்டுத்தீயாக பரவியது. நள்ளிரவு 12.30க்கு வேளச்சேரியில் இருந்து ஒரு மருத்துவர் கொட்டும் மழையில் நனைந்து சென்று பசுவையும் கன்றையும் காப்பாற்றினார்.

முந்தைய ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக நேர்முக தேர்விற்கு கோவை செல்ல வேண்டிய கிராம புற மாணவி, தவறுதலாக சென்னை வந்துவிட, காலையில் நடைபயிற்சி செல்லும் நண்பர்கள் மாணவியின் ஆர்வம், எடுத்துள்ள மதிப்பெண்கள் எல்லாம் கவனித்து விமானம் மூலம் கோவை அனுப்பி நிச்சயமாக கிடைக்கக்கூடிய கல்லூரி வாய்ப்பை மாணவிக்கு பெற்று தந்தனர்.

இரண்டு சம்பவங்களும் எழுத்தை பிரதானப்படுத்தியே முன்னெடுத்து செல்லப்பட்டது. வாசிப்பின் மூலமே பகிரப்பட்டது.

பசுவின் உரிமையாளருக்கும், கால்நடை மருத்துவருக்கும், உடன் உதவியவர்களுக்கும் எந்த ஒரு உறவும் கிடையாது, நட்பும் கிடையாது. சென்னையில் உதவிய நண்பர்களுக்கும், காரில் அழைத்து சென்று விமானம் ஏற்றிவிட்ட நண்பர்களுக்கும், கோவையில் சரியாக பிக்கப் செய்து கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள செய்த நண்பர்களுக்கும், நிலைமை எடுத்துரைத்து கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள உதவிய நண்பர்களுக்கும் எந்த உறவும் கிடையாது. முன்பின் அறிமுகமும் கிடையாது.

உதவிக் கொள்வதற்காக மட்டுமே எழுத வேண்டுமா? வாசிக்க வேண்டுமா? பகிர வேண்டுமா? என்றால் இல்லை. மெரினா போராட்டமாக இருக்கட்டும், அரசியல்வாதிகளின் கேடுகெட்ட நடத்தையின் வழக்கு தீர்ப்பாகட்டும் சமூகத்தின் மீதுள்ள கோவங்களை, ஆற்றாமைகளை எழுத்தில் கொட்டி தீர்க்கலாம். மெரினாவில் நடந்த போராட்டங்களும் எழுத்தின் ஊடே பயணப்பட்டு விஸ்வரூபமெடுத்தது. எழுதியே போராட்டம் நடத்தி வெகுண்ட எழுந்த மக்களைக் கண்டு சில வழக்குகளை தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரித்த வரலாறுகளும் இருக்கின்றன.

கன்னட எழுத்தாளர் ஹம்பி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கல்புர்கி நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் மூலம் இந்த அரசாங்கம் நமக்கு எழுதுவதின் அவசியத்தை இன்னும் ஆணித்தரமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

கழுத்தை நெறிக்கும் அதிகார வர்க்கத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி பேனா எனும் ஆயுதம் ஏந்தி எழுதுவது ஒன்று தான்.

-ராஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...